Thursday, 29 November 2012

மனம்!(Mind)



கடவுள்  மனிதர்களுடன் தங்கும்  எண்ணத்தில்  பூலோகம்  வந்தார்.
தெருவில் நடந்துகொண்டிருந்த வயதான ஒரு நபரிடம், தன்னைக் கடவுள் என்று அறிமுகம் செய்து கொண்டார்.



அந்த வயதானவர் சொன்னார், கடவுளே என்னை ஏன் இப்படி அசிங்கமாக படைத்தாய்.என்னையும் ஒரு சினிமா   நடிகரைப் போல் படைத்திருக்கலாமே என்றார்.
அவரிடமிருந்து சாமர்த்தியமாக கடவுள் தப்பினார்.

பூங்காவில் இருந்த ஒரு பெண்ணிடம் தன்னைக்  கடவுள் என்றார். அந்தப் பெண், கடவுளிடம்  "எதிர் வீட்டில் இருக்கும் கங்காவைப் போல் தனக்கு தலைமுடி நீளமாக  இல்லை"


என முறையிட்டாள். கடவுள் எடுத்தார் ஓட்டம்.

பள்ளியில் படிக்கும் சிறுவனுக்கு முன்பு   கடவுள் நின்றார்.

 அவன் கூறினான், உன்  படைப்பு  எல்லாம் ஓகே தான், ஒரு ஐஸ்கிரீம் மலையை  நீ ஏன் உருவாக்கவில்லை என கோபித்துக்கொண்டான்.
அவனிடமிருந்து நழுவினார் கடவுள்.

சந்தித்த ஒவ்வொரு மனிதனும் கடவுளின் படைப்பில் உள்ள குறைகளையே  கூறினார்கள்.இந்த இடத்தில ஆறு ஓடினால் நன்றாக இருக்கும், இந்த மலையை  நகர்த்தினால்நல்லது, இங்கே பள்ளம் இருந்தால் நல்லது, கடல் இருந்தால் நல்லது, இப்படியாக பலப் பல குற்றங்கள்,குறைகள்.
 
மகளுக்கு கல்யாணம் செய்ய வேண்டும், மகன் படிக்க வேண்டும், பிறக்கும் குழந்தை ஆணாக இருக்க வேண்டும்,
தொழிலில் லாபம் கிடைக்கவேண்டும், வருமானம்  உயர  வேண்டும்
இப்படி பலப் பல வேண்டுதல்கள். அலுத்துப்போனார்  கடவுள்.

ஓடினார்,ஓடினார் மனிதர்களிடமிருந்து தப்பித்தால் போதும் என கடவுள் உயரமான மலை மீது அமர்ந்து கொண்டார்.

மனிதர்கள் அவரை விடுவதாக இல்லை. மலை உச்சி வரை அவரை தேடி நடையாய் நடந்தார்கள்.
அங்கிருந்து கடலுக்குள் ஓடி ஒளிந்தார், அங்கும் அவரைத் தேடி கப்பலில் கூட்டம் அலைமோதியது.

ஒளிந்து கொள்வதற்கு வசதியாக ஒரு இடமும் அகப்படவில்லை.
யோசித்தார் கடவுள், மனிதன் தேடாத இடம் எது?.....ஆழ்ந்த சிந்தனைக்குப்பின் கண்டுபிடித்தார். அதுதான் மனித மனம்.
கடைசியில் கடவுள் மனிதனின் மனதிற்குள் ஐக்கியமானார்.
ஏனென்றால் மனம் ஒன்றைத்தான் மனிதன் தேடுவதில்லை, வெளியில்தான் எல்லாவற்றையும் தேடிக் கொண்டிருகிறான்.



மனம் பற்றி மகரிஷி இப்படியாகக் கூறுகிறார் :

"கருமூலம் எண்ணிறந்த பிறப்பால் வந்த
கருத்தாற்றல் அடிப்படையாய் அமையப் பெற்று
உருவெடுத்த பின் உடலால் அறிவால் துய்த்த
உணர்ச்சி, பழக்கம், ஒழுக்கம்,விளக்கம் மற்றும்
வரும் தேவை, இருப்பு, சூழ்நிலை, தொழில் செய்
வாய்ப்பு, உடல்நலம், அறிவின் வளர்ச்சி கூடி
ஒருவருக்கு அறிவியக்கம் அவ்வப்போது
உருவாகும் தொகுப்புச் சொல் மனமாம் காணீர்!"

மனம் பற்றி முறையான விளக்கம் மற்றும் மனதிற்கு தேவையான பயிற்சிகள் மனவளக்கலை மன்றத்தில் கற்றுக்கொடுக்கப்படுகிறது.



கொசுறு

திருவாத்தானிடம் உள்ள ஒரே ஒரு கெட்ட பழக்கம் திருடுவதுதான்.
அவனது அப்பா பணத்தை வீட்டிற்குள் எங்கு வைத்தாலும் சாமர்த்தியமாக சுட்டுவிடுவான்.
பீரோ,அலமாரி, சமையல் அறை, கதவு, ஜன்னல் எங்கு பணம் வைத்தாலும்  விட்டுவைப்பதில்லை.
அவன் அம்மாவிடம் அவனது திருட்டுதனத்தைக் கூறி அலுத்துக்கொள்வார்  அப்பா .
கொஞ்ச நாளாக அவர்,  திருவாத்தானைப் பற்றி புகார் கூறுவதில்லை.
ஆச்சர்யத்துடன்  அவள் கேட்டாள்,
ஏங்க இப்பவெல்லாம் பணத்த எங்க வெக்கிறீங்க?, பணம் பத்திரமா இருக்குது போல!...

அடியே, அவன் தொடாதது அவன் பாட புத்தகம் ஒன்றுதான், அதுக்குள்ளதான் பணத்தை ஒளித்து வைக்கிறேன்.

2 comments:

  1. Dear Dinakaran Sir,
    Valzhga Valamudan. Please correct me in case I have not addressed ur name correctly.
    All your stories are really helpful to take Maharishi concepts easily to people mind and make them to implement the same.
    Swamiji laid road clearly as 6 lanes, ur adding décor to the same. Hats off.

    Ungal Sevai Thodara Valzthukal.

    Regards,
    Bhavani
    Dubai.

    ReplyDelete
  2. Vaazhga Valamudan Amma
    Thanks for your visit and comments.Maharishi has made everything simple for us.Hope each one of us will reach the destiny natural way. Best Wishes to you and your family.

    dhinakaran chelliah

    ReplyDelete